Raja Rani 2 Today Episode | 25.02.2022 | Vijaytv
Raja Rani 2.25.02.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியாவின் அண்ணன் குழந்தைக்கு தொட்டிலில் போடும் விழா சிறப்பாக நடந்தது. பின் குழந்தையை தொட்டிலில் போட்டு பெயரும் சூட்டினார்கள். குழந்தைக்கு பெயர் அருவி என்று வைத்தார்கள். இந்த பெயரை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். நல்ல பெயர் என பாராட்டினார்கள். யாரும் இல்லாத நேரமாக சந்தியா தான் எழுதிய லட்சிய கடிதத்தை குழந்தைக்கு அடியில் வைத்தார். பின் சரவணன் சந்தியாவை அழைத்து பேசினார். அவருக்கு ஒரு பரிசு என்று அந்த பேனாவை கொடுத்தார். அதை பிரித்து பார்த்ததும் என்ன என்று விசாரித்தார். அப்போது சரவணன் நடந்ததை கூறினார். அந்த குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில் நானும் அங்கு தான் இருந்தேன். அப்போது சந்தியாவின் அப்பா அம்மா இருவரையும் பார்த்ததாக கூறினார். அவர் கடைசியாக என்னிடம் தன பேசினார். அவர் கையில் இந்த பேனா இருந்தது. நான்தான் வைத்து இருந்தேன். டாக்டர் எவ்வளவோ முயற்சி செய்தார் அவர்களை காப்பாற்ற ஆனால், அது முடியாமல் போய்விட்டது என்று கூறினார். இதை கேட்ட சந்தியா அதிர்ச்சி அடைந்தார். என் அப்பா இறப்பதற்கு முன் என்னை உங்களிடம் ஒப்படைத்து சென்று உள்ளார் என்று அழுது புலம்பினார். சந்தியா எழுதி வைத்த கடிதம், குழந்தையை தூக்கி விளையாடும் போது கீழே விழுந்தது. அந்த கடிதத்தை சந்தியாவின் அண்ணன் எடுத்து பார்த்தார். அதை படித்த பின் இதை சரவணன் படித்து பார்க்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் சரவணன் கையில் மொய் பையைல் அதை போட்டு கொடுத்தார். ஆனால் அதில் அந்த கடிதம் இருப்பது யாருக்குமே தெரியாது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.