ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் இவர்களது திருமணத்துக்காக முகிர்த்த கால் ஊன்றினர்கள். பின் கடவுளை வணங்கினார்கள். அந்த நேரம் அழகர் டிராக்டர் ஒன்றை எடுத்து வந்து அந்த முகுர்த்த கால் மீது மோதி கீழே தள்ளினார். டிராக்டரில் ப்ரேக் பிடிக்கவில்லை என்றும் கூறினார். ஆனால் குடும்பத்தில் அனைவரும் அதை ஒரு அபசகுணம் என்று பதறினர்கள். பின் அதற்கான பரிகாரம் செய்யலாம் என்று கோவிலில் பொங்கல் வைக்க ஏற்பாடுகள் நடந்தது. ஜீவா மற்றும் காவ்யா இருவரும் தனியாக சந்தித்து பேசினார்கள். கடவுளிடம் தங்கள் வேண்டுதல்களை பரிமாறினார். அழகர் நேரடியாக அவர் அத்தையிடமே இந்த திருமணம் முடியும் வரை தான் பிரச்சனை செய்வேன் என்று கூறினார். இதையும் மீறி இந்த கல்யாணம் எப்படி நடக்கும் என்று பார்க்க போவதாக கூறினார். தனக்கு தான் பிரியாவை கட்டி கொடுப்பதாக பேச்சு என்று ஆதங்கப்பட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…