ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் இருவரது திருமணத்துக்காக கோவிலில் பொங்கல் வைத்து சாமி கும்பிட குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தார்கள். அப்போது சாமியிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறினார்கள். சாமி உத்தரவு கொடுத்தால் தான் பொங்கல் வைக்க வேண்டும் என்றார்கள்.பின் பூசரியும் சாமி வந்து அருள் வாக்கு கூறினார். சில சங்கடங்கள், சில பிரச்சனைகள் இருக்கிறது ஆனால் ஒன்றா சேர்ந்து வாழ்வார்கள் என்று அருள் வாக்கு கூறினார். பின் சாமியே உத்தரவு கொடுத்துவிட்டது என்று பொங்கல் வைக்க ஆர்ம்பித்தார்கள். காவ்யா மற்றும் சக்தி இருவரும் ஜீவா மற்றும் அர்ஜுனை வம்பிழுத்துக்கொண்டு இருந்தார்கள். அந்த நேரம் அழகர் அவர்களை வேண்டும் என்றே வம்பிழுதார். அதே போல் மாப்பிள்ளை பெண்ணின் தாய் மாமன் மகன் இருக்கும்போது அவருடன் சண்டை போட்டுதான் பொண்ணை கட்ட வேண்டும் என்றார். அதற்கு அருணாச்சலம் தன் மகன் போட்டிக்கு தயார் என்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…