தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கார்த்திக் இருவருக்கும் தலா ஒரு லட்சம் மாத சம்பளம் தரப்படும் எனவும். கார்த்திக் நிருவாக பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும், தமிழ் அதில் தலையிட கூடாது என்றும் கூறினார். அதனால் தமிழ் ஒரு தொழிலாளராக மட்டுமே அந்த கம்பேனியில் இருப்பது போல் கூறினார். தமிழ் அதை கேட்டு நொறுங்கிப்போனார். தன் சொந்த கம்பேனியில் தான் சம்பலதுக்காக வேலை செய்வது போல் இருப்பதால் வருந்தினார். அதனால் மனம் உடைந்த தமிழ், தானும் சரஸ்வதியும் இந்த வீட்டில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் பணம் இவளோ தர வேண்டும் நெட்ரு என்று கேட்டார். இதை கேட்டதும் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். நடேசன் முன் வந்து, எதற்காக இப்படி பேச வேண்டும்? இவளோ நாள் இப்படியா உன்னை நடத்தினோம் என்று கேட்டார். ஆனால் கார்த்திக் தனக்கு அம்மாவின் முடிவை ஏற்றுக்கொள்கிறதாக கூறினார். தமிழ் வேறு வழி இல்லாமல் இதை ஒத்துக்கொண்டார். ஆனால் ஆற்காடு பாய்க்கு லோடு அனுப்ப வேண்டும் என்றார். உடனே கார்த்திக் இந்த முடிவு நான் மட்டும் தான் எடுப்பேன், என்னால் அவருக்கு லோடு அனுப்ப முடியாது என்றார். இதனால் தமிழ் தன் சம்பளமான மாதம் 1 லட்சத்தை இந்த கணக்கில் கழித்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார் தமிழ். ஆனால் லோடு ஆற்காடு பாய்க்கு போக வேண்டும் என்று கூறினார். நடேசன் வெளியே சென்ற போது நமச்சி கூடவே வந்து பேச முயற்சித்தார். ஆனால் நடேசன் முகம் கொடுத்து பேசவில்லை. பின் வீட்டுக்கே வந்து சண்டை போட்டர். அம்மாவை நான் பார்த்தே ஆவேன் என்று கூச்சல் போட்டார். இதனால் கோதை வெளியே வந்து வீட்டுக்குள் வருமாறு கூறினார். ஆனால் தமிழுக்கு இந்த வீட்டில் என்ன இடம் உள்ளதோ அதே இடம் தான் உனக்கும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? கார்த்திக் இதற்கு என்ன செய்தார்? காணொளியை பார்க்க…