மந்தனா மற்றும் ஹர்மன் ப்ரீத் கவுரின் அதிரடியால் 317 ரன்களை குவித்து இருக்கிறது இந்திய அணி.
ஐசிசி மகளிர் உலககோப்பையின் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டத்தில், மந்தனா மற்றும் ஹர்மன் ப்ரீத் கவுர் அதிரடியாக விளையாடி சதத்தை குவித்து இருக்கின்றனர். இருவரின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகளுக்கு 317 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது இந்திய அணி.
“ ஒரே மேட்சில் இரண்டு பேர் சதம் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றனர். தற்போது வரை மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட் இழப்பின்றி 9 ஓவர்களுக்கு 70 ரன்கள் எடுத்து இருக்கிறது “