Tamizhum Saraswathiyum Today Episode | 30.03.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 30.03.2022

tamizhum Saraswathiyum. 30.03.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சந்திரகலாவை எச்சரித்து சென்ற பின் உடனே கார்த்திக்கை அழைத்து அவசரமாக வர வைத்தார். கார்த்திக் வந்ததும் கோவமாக இருப்பது போல் இருந்தார். ஆதி தமிழ் பேசியபோது எடுத்த வீடியோவை அவருக்கு போட்டு கமித்தார். அதில் தமிழ் கோவமாக என் குடும்பத்தை பிரிக்க முடியாது, அதை நடக்கவும் விட மாட்டேன் என்று கத்தியது, சரஸ்வதிக்கு மயக்க மருந்து கொடுத்து பரிட்சை எழுத விடாமல் செய்தது என்று பேசி இருந்தார். ஆனால் அதை சந்திரகலா என் தகுதிக்கு சரஸ்வதிக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுப்பது என்பது எனக்கு பெரிய அசிங்கம். இந்த மாதிரியான சில்லறை வேலைகளை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்று கூறினார். இதை கேட்டதும் கார்த்திக் கோவத்தில் கொந்தளித்தார். என் அண்ணன் அந்த சரஸ்வதி பேச்சை கேட்டு தான் இப்படி பேசுகிறார் என்றார். இப்படி மாற்றி விட்டார் என மீண்டும் சரஸ்வதி மேல் கோவம்கொண்டார். மேலும் சந்திரகலாவை சமாதானமும் செய்தார். பின் அதே கோவத்தோடு கம்பேனிக்கு வந்து தமிழை எல்லார் முன்னிலையிலும் தர குறைவாக பேசினார். என் மாமியார் வீட்டில் எதற்கு போய் கத்த வேண்டும் என்று கோவமாக பேசினார். தமிழ் அதற்கும் பொறுமையாக பதில் சொன்னார். இது குடும்ப விஷயம் தனியாக பேசலாம் என்று கூறினார். ஆனால் கார்த்திக் அதை காதில் வாங்கவே இல்லை. இப்படி தான் பேசுவேன் என்று பேசினார். பின் தமிழ் அவருக்கு பேசி புரிய வைக்க முயற்சித்தார். கை நீட்டி உன்னை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் சந்திரகலா பேச்சை கேட்டு இந்த கம்பேனி மற்றும் குடும்பத்தை பிரித்து விடாதே என்று கேட்டுக்கொண்டார். ஆனால் கார்த்திக் நான் உன்னை மன்னிக்க வேண்டும் என்றால் இந்த கம்பேனிக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதி தருமாறு கேட்டார் கார்த்திக். ஆனால் தமிழ் அதை எந்த நிலையிலும் செய்ய மாட்டேன் என்று உறுதியாக கூறினார். இதை எல்லாம் நீயாக பேசவில்லை. உன் மாமியார் பேச வைக்கிறார். யோசித்து பார் என்று கூறினார் தமிழ். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author