Mouna Ragam 2 Today Episode | 06.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 06.04.2022

Mouna Ragam 2. 06.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யாவை விட்டு பிரிவதை நினைத்து மல்லிகா வருத்தமாக இருந்தார். சத்யாவும் அம்மா வை நிம்மதியாக ஒரு நாள் இங்கு வைத்து பார்த்துக்கொள்ள முடியவில்லையே என்று வருந்தினார். பின் அனைவருக்குமே ஒரு பரிசு வாங்கி வைத்து இருப்பதாக வருண் கூறினார். அதை எடுக்க மாடிக்கு போனார். தருண் வருண் இடம் எப்படியாவது அவர் மனதில் உள்ள விஷயத்தை சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் வருண் பரிசு எடுக்கும் அவசரத்தில் அதை கவனிக்கவில்லை. பின் ஸ்ருதி தருண் இடம் கெஞ்சினார். அவருடன் அன்பாக பேசி நடந்தது கொண்டால் இது போல் நடந்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். ஆனால் தருண் இன்றே நீ இந்த வீட்டில் இருக்கும் கடைசி நாள் என்று கூறினார். ஷீலா என்ன சத்தம் என்று கேட்டதும் தருண் அங்கு இருந்து கிளம்பினார். ஸ்ருதி தன் மனதில் இருக்கும் வேதனையை ஷீலாவிடம் கூறினார். தருண் என்னை புரிந்துகொள்ளவே இல்லை என்று அழுது புலம்பினார். அவர் அழுவதை பார்த்த வருண் என்ன நடந்தது என்று விசாரித்தார். அதற்கு ஸ்ருதி சத்யா தான் காரணம் என்று கூறினார். தருண் மற்றும் சத்யா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்று பொய் சொன்னார். அதை கேட்ட வருண் என்ன செய்தார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author