Raja Rani 2 Today Episode| 12.04.2022 | Vijaytv
Raja Rani 2. 12.04.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, அர்ச்சனா தன் அம்மா அப்பா இருவரையும் பாஸ்கர் வீட்டுக்கு அழைத்து சென்றார். ஆனால் அவர் அம்மா அப்பாவுக்கு அது யார் வீடு என்றே தெரியவில்லை. அர்ச்சனா தான் இது பாஸ்கர் வீடு, இங்கு தான் பிரியா வாழ போகிறாள் என்று கூறினார். இதை கேட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இதெல்லாம் சரி இல்லை, போதும் கிளம்பலாம் என்று கூறினார்கள். ஆனால் அர்ச்சனா அதை கேட்கவில்லை. பாஸ்கரின் அம்மா அப்பாவிடம் பேச ஆரம்பித்தார். பார்வதிக்கு வீட்டு வேலை எதுவுமே தெரியாது, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாது என்று அடுத்து அடுத்து பார்வதியை குறை சொல்ல ஆரம்பித்தார். பின் அவரின் தங்கை பிரியா சமயலில் கில்லாடி, அழகு, படிப்பு, மரியாதை என்று அனைத்தையும் பெருமையாக பேசினார். கடைசியாக பார்வதிக்கும் பாஸ்கருக்கும் நிச்சயம் தானே முடிந்தது, அதை நிறுத்தி விட்டு பிரியாவை திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று கூறினார். பிரியாவுக்கும் பாஸ்கரை ரொம்ப புடிக்கும் என்று கூறினார். இதை கேட்ட பாஸ்கரின் அம்மா அப்பா இருவரும் கோவத்தில் கத்தினார்கள். உடனே வீட்டை விட்டு கிளம்ப சொன்னார்கள். சொந்த நாத்தனார் திருமணத்தை நிறுத்தி உன் தங்கைக்கு திருமணம் செய்ய நினைக்கிறாய் என்று அசிங்க படுத்தினார்கள். ஆனால் அர்ச்சனா தன் தங்கைக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை. பார்வதிக்கு ஆக கூடாது என்று நினைத்தார். பின் முகூர்த்த புடவை எடுக்க இரு வீட்டாரும் கடைக்கு வந்தார்கள். பாஸ்கர் விக்கியையும் அழைத்து வந்தார். அவர் தான் புடவை எடுக்க உதவ வேண்டும் என்று கூறினார். பார்வதிக்கு பதட்டமாக இருந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.