Mouna Ragam 2 Today Episode | 20.04.2022 | Vijaytv

Mouna Ragam 2. 20.04.2022

Mouna Ragam 2. 20.04.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா தன் பக்க நியாயத்தை கூறி முயற்சி செய்தார். ஆனால் வருண் எதையும் கேட்கும் நிலையில் இல்லாததால் சத்யா எதையும் சொல்ல முடியவில்லை. இதனால் சத்யா இந்த வீட்டை விட்டு வெளியே போவதாக கூறினார். இனி இந்த வீட்டுக்கு எப்போதும் திரும்பி வர மாட்டேன் என்று கூறினார். இதை கேட்டு ஷீலா மற்றும் ஸ்ருதி அவர் மீது பாசமாக இருப்பது போல் நடித்தார்கள். இப்படி முடிவு எல்லாம் எடுக்க கூடாது என்று கூறினார். மனோகர் வந்த பின் எதுவானாலும் பேசிக்கொள்ளலாம் என்று வாய் வார்த்தைக்காக கூறினார். வருண் நடப்பதை அதிர்ச்சியாக பார்த்தார். பொது ஷீலா சத்யாவை போக வேண்டாம் என்று கூறுமாறு வருண் இடம் சொன்னார். ஆனால் வருண் வாயை திறந்து எதையும் பேசவில்லை. இதனால் மீண்டும் கோவம் கொண்ட சத்யா உடனே வீட்டை விட்டு கிளம்பினார். உடனே ஷீலா மனோகருக்கு அழைத்து சத்யா வீட்டைவிட்டு கிளம்பிவிட்டாள் என்று கூறினார். இதை கேட்ட மனோகர் அதிர்ச்சி அடைந்தார். என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு தனக்கு எதுவும் ததெரியாது என்று கூறிவிட்டார் ஷீலா. உடனே மனோகர் மற்றும் தருண் இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். அதே சமயம் இந்த நல்ல செதியையுடன் தன் வீட்டில் சொல்ல வேண்டும் என்று கிளம்பினார் ஸ்ருதி. சென்று காதம்பரி மற்றும் ருக்மணி இடம் பேசி விஷயத்தை கூறினார். அதை கேட்ட இருவர் சந்தோசத்தை கொண்டாடினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author