TATA IPL 2022 | Match 32 | ‘பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி’

TATA IPL 2022 Match 32 Delhi Capitals Won By 9 Wickets

TATA IPL 2022 Match 32 Delhi Capitals Won By 9 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 32 ஆவது போட்டியில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது டெல்லி.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி, டெல்லி அணியின் சீரான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 115 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. அதற்கு பின் ஆடிய டெல்லி அணி டேவிட் வார்னர் 60(30) மற்றும் பிரித்திவ் ஷாவின் 41(20) அதிரடியால் 10.3 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்திப் பிடித்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.

நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றிய குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார். நியாயப்படி இந்த விருது அக்ஸர் பட்டேலுக்கு தான் சேர வேண்டும் நான்கு ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா என்று இரண்டு முக்கியமான விக்கெட்டுக்களையும் கைப்பற்றி இருப்பார்.

“ என்ன தான் நாம் நினைத்து இருந்தாலும் குல்தீப் ஆட்டநாயகன் விருதை கையில் வாங்கியதும், ’நான் இதை அக்ஸர் படேலுடன் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று சூழலை உணர்ந்து கூறிய விதம் ’அவ்ளோ தான் கிரிக்கெட்’ என்ற நிலைக்கு மீண்டும் நம்மை திரும்ப கொண்டு வந்தது “

About Author