Tamizhum Saraswathiyum Today Episode | 25.04.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வேகமாக வீட்டுக்கு வந்தார். கோதை அதற்குள் அபிக்கு அழைத்து பேசினார். அபியும் பதறாமல் தான் மருத்துவமனையில் இருப்பதாக கூறினார். மேலும் கோதை பணம் எதுவும் வேண்டுமா என்று கேட்டார். அபி அதெல்லாம் வேண்டாம் என்று கூறினார். கார்த்திக் அதற்குள் வீட்டுக்கு வந்து தான் அபியை பார்த்ததாக கூறினார். ஆனால் நான் துரத்தி சென்று பிடிக்கும்போது அதில் மின்னல் அம்மா இருக்கிறார்கள். Odre குழப்பமாக உள்ளது என்று கூறினார். அதற்கு கோதை குழம்பாமல் தான் இப்போது தான் அபி இடம் பேசியதாக கூறினார். ஒரு குழப்பமும் இல்லை என்றார். பின் என்ன விஷயமாக வீட்டுக்கு வந்தாய் என்று விசாரித்தார். அப்போது கார்த்திக் தன் மனைவி மட்டும் எதற்காக வேலை செய்ய வேண்டும், கம்பனியில் தன் காது பட கேவலமாக பேசினார்கள் என்றார். உடனே கோதை யார் இப்படி செய்து இருப்பர் என்று எனக்கு தெரியும். நமச்சி தமிழ் இருவரும் உன் காது படும்படி பேசினால் நீ உடனே வசுந்தராவை நீ வேலை செய்ய கூடாது என்று சொல்லி விடுவாய் என்பது அவர்கள் கணக்கு என்று கோதை கூறினார். அந்த நேரம் சந்திரகலா அங்கு வந்து அம்மா சொல்வது தான் சரி, அவர்கள் நடத்தும் நாடகத்தில் விலுக வேண்டாம் என்று கூறினார். சரஸ்வதி தன் திட்டம் அனைத்தும் வீணாகி விட்டதே என்று கவலையாக இருந்தார். மதிய சாப்பாடு எடுத்து சென்றார் சரஸ்வதி. அப்போது சந்திரகலா அவருக்கு அழைத்து வெறுப்பு ஏற்றினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author