ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இடம் தனியாக பேச நினைத்தார். ரம்யாவுக்கு ஒரு வரன் வந்தது, ஆனால் ரம்யா 15 வருடமாக உங்களை தான் காதலிக்கிறேன் என்று கூறினார். என்னை போல் ஒரு உணர்ச்சி இல்லாதவள் உங்களுக்கு மனைவியாக இருப்பதை விட ரம்யாவையே திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறினார் காவ்யா. அதை கேட்ட பார்த்திபன் அதிர்ச்சி அடைந்தார். என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் நின்றார். காவ்யா இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை, அதனால் பேசி ஒரு முடிவு எடுக்கலாம் என்று கூறினார். ஆனால் ரம்யாவை தன்னால் மனைவியாகா நினைக்க முடியாது என்றார் பார்த்திபன். பிரியா தன்னுடன் கடைக்கு வருமாறு ஜீவாவை அழைத்தார். அவர் வர தயங்கினார். ஆனால் பிரியா அவரை அழைத்து சென்றார். பரியா ஒவ்வொரு பொருளும் பார்த்து பார்த்து வாங்கினார். தனக்கு தன் மாமனார் மாமியார் கணவர் என்று அனைவருக்கும் துணி வணகினார். ஆனால் இது அனைத்தையும் காவ்யா பார்க்கிறார். ஜீவாவுடன் பிரியா சந்தோசமாக இருப்பதை பார்த்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…