Tamizhum Saraswathiyum Today Episode | 15.06.2022 | Vijaytv

tamizhum Saraswathiyum. 15.06.2022

tamizhum Saraswathiyum. 15.06.2022

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சரஸ்வதியின் முதல் இரவுக்காக நமச்சி எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்தார். அறையை அலங்காரம் செய்து பூ பழம் இனிப்பு என்று எல்லாமே ஏற்பாட்டில் இருந்தது. தமிழுக்கு ஆர்வம் அதிகம் ஆனது. பல நாள் கனவாக இருந்த முதல் இரவு இன்று நடக்க போகிறது என்று துள்ளி குதித்தார். மேலும் சரஸ்வதியை அமாய்யல் செய்ய விடாமல் அடிக்கடி அறைக்கு அழைத்து பேசினார். சின்ன சின்ன குறும்புகளும் செய்தார். சரஸ்வதி இன்று அனைவருக்கும் ருசியாக சமைத்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் பன்னீர் டிக்கா மசாலா செய்து இருந்தார் சரஸ்வதி. ஆனால் கோதை இடம் அதற்கு அனுமதி வாங்காமல் செய்து இருந்தார். சாப்பிட அனைவரும் அமரும்போது கோதை அந்த மசாலாவை பார்த்து கோவம் கொண்டார். யாரை கேட்டு இதை செய்தாய் என்று கேட்டார். இரவில் இது போன்ற உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது இல்லை. ஜீரணம் ஆகாது என்று கூறினார். ஆனால் சரஸ்வதி இன்று வீட்டில் ஒரு நல்ல விஷயம் நடந்ததால் இதை சமைத்தேன் என்று கூறினார். அதற்கு கோதை நீ செய்த விஷயம் இந்த குடும்பத்துக்கு நல்லது என்றதால் தான் பூஜை அறையில் விளக்கு ஏற்ற அனுமதித்தேன் அதற்காக பழசை மறந்து உன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறினார். இதை கேட்டதும் சரஸ்வதி நொறுங்கி போனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author