ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அவரது சீட்டில் அமர்ந்து அவரது தோழிக்கு காத்திருந்தார். ஆனால் நேரம் ஆனதால் அவருக்கு அழைத்து பேசினார். ஆனால் அவரது தொழியில் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை என்று மருத்துவமனைக்கு செல்கிறேன், தன்னால் வர முடியாது என்று கூறினார். பின் காவ்யா அவள் வர போவது இல்லை என்று பஸ் கண்டக்டரிடம் கூறினார். பின் சற்று நேரத்தில் பார்த்திபன் அதே பேருந்துக்கு விரைந்தார். ஓடி வந்து வண்டியை நிறுத்தி அதில் எறவும் செய்தார். கண்டக்டர் உதவியுடன் காவ்யா கண்ணில் படாமல் பின் சீட்டில் அமர்ந்தார். பின் பார்வதிக்கு அழைத்து தானும் காவ்யாவுடன் பெங்களூர் செல்கிறேன் என்று கூறினார். அவரும் அதை கேட்டு சந்தோஷப்பட்டார். ஜீவா பிரியா இருவரும் காரில் ஹோம் இருக்கும் இடத்துக்கு சென்றார்கள். போகும் வழியில் ஜீவாவின் முகம் சரியே இல்லையே என்று நினைத்து பிரியா அவரிடம் பேசிக்கொண்டே வந்தார். பின் குழந்தைகளை வெளியே அழைத்து செல்ல தயார் ஆனார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…