Raja Rani 2 Today Episode | 24.06.2022 | Vijaytv

Raja Rani 2. 24.06.2022

Raja Rani 2. 24.06.2022

ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அந்த சாமியாரை பார்த்தே ஆக வேண்டும் என்று கிளம்பினார் குடும்பத்துடன். ஆதிக்கு ஜெஸ்ஸி தன் குடும்பத்தினருடன் பார்த்தால் மொத்த திட்டமும் வீணாகி விடும் என்று பாய்ந்தார். அதனால் எதேதேதோ காரணத்தை சொல்லி அங்கு இருந்து கிளம்பினார். பின் சிவகாமி, ரவி, அர்ச்சனா, செந்தில் மற்றும் மயில் அனைவரும் தரிசனம் செய்ய 1000 ரூபாய் கட்டி ஆசிர்வாதம் வாங்கினார்கள். ஆனால் அப்போது அர்ச்சனா சொன்ன கதையை வைத்து அந்த சாமியார் தானே சொல்வது போல் சிவகாமி வீட்டுக்கதையை கூறினார். அர்ச்சனா கர்ப்பமாக இருப்பதும், ரவி ஒரு தனி ஆளாக இந்த குடும்பத்தை உருவாக்கியதும், பின் மூத்த மருமகள் வந்த நாளில் இருந்து வீட்டில் பிரச்சனை நடக்கிறது என்றும் அர்ச்சனா மூலம் தெரிய வந்ததை அவரே சொல்வது போல் கூறினார். அதையும் கேட்ட சிவகாமி ஆச்சரியமாக பார்த்தார். பின் அங்கு இருந்து கிளம்பினார்கள். அதே நேரம் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் அங்கு வந்தார்கள். எதிர்பாராத விதமாக சந்தியா சிவகாமி மீது மோதினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author