ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா இருவரும் வாங்க வேண்டியதை வாங்கிகொண்டு ஊருக்கு கிளம்பினார்கள். வீட்டில் அனைவரும் அவர்களுக்காக அவளோடு காத்துக்கொண்டு இருந்தார்கள். காவ்யா வண்டியை தானே ஒட்டுவதாக கூறினார். பின் அவர் ஒட்டவும் செய்தார். போகும் வழியில் இளநீர், நுங்கு என சாப்பிட்டார்கள். பார்த்திபன் நடக்கும் எல்லாத்தையும் ஒன்று விடாமல் பார்வதி இடம் கூறினார். பின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தார்கள். காவ்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அனைவரும் வாழ்த்து கூறினார்கள். பின் அங்கு நடந்த அனைத்தும் பார்த்திபன் ஒன்று விடாமல் ஒப்பித்து இருப்பது தெரிய வந்தது காவ்யாவுக்கு. அவருக்கு காவ்யா கடிகாரம் வாங்கி கொடுத்தது, பதிலுக்கு இவர் பொம்மை வாங்கி கொடுத்தது என்று அனைவரும் சந்தோசம் கொண்டார்கள். ஆனால் இங்கு நடப்பது எதுவும் மஞ்சுளா மற்றும் தேவிக்கு பிடிக்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…