50 வயதுக்கு மேற்பட்ட பெண் மற்றும் திருநங்கை கைதிகளை விடுவிக்க உத்தரவு!

Over 50 Years Old Girl Prisoners Releasing From Jail

Over 50 Years Old Girl Prisoners Releasing From Jail

50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் 60 வயதைக் கடந்த ஆண்களை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலியல், கொலை குற்றவாளிகள் தவிர்த்து 50 வயதை கடந்த பெண் கைதிகள், திருநங்கைகள், 60 வயதை கடந்த ஆண் கைதிகள், தண்டனை முடிந்தவர்கள், அபராதம் செலுத்த முடியாமல் சிறையில் இருப்பவர்கள் என்று அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

“ மரண தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள், தீவிரவாதிகள் இந்த உத்தரவின் கீழ் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்பது கூடுதல் தகவல் “

About Author