ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி உடனே இந்த சாமியார் மீது கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று சந்தியா மற்றும் சரவணன் இடம் கூறினார். இதனால் நம் குடும்பத்துக்கு கேட்ட பேர் மட்டும் இல்லாமல் இந்த ஊரே சாபத்துக்கு ஆள் ஆகி விடும் என்று கூறினார். மேலும் நம் குடும்பத்தை அந்த சாமியார் எதும் சாபம் விட்டால் அது பலித்து விடும் என்றார். சந்தியா அதற்கு பதில் சொல்லுவதற்கு முன்பே சரவணன் பதில் சொன்னார். அந்த வழக்கை வாபஸ் வாங்க முடியாது என்று கூறினார். மேலும் அந்த சாமியார் ஒரு அயோக்கியன் என்றும் கூறினார். அவரை பற்றிய சுய ரூபம் தெரியாமல் அவரை புகழ்ந்து பேச வேண்டாம் என்று கூறினார். இதை கேட்ட சிவகாமி மேலும் கோவத்தில் கொந்ததளித்தார். ஆனால் சரவணன் மற்றும் சந்தியா அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தார்கள். Stru நேரத்தில் அந்த சாமியார் அவர்கள் தெருவுக்கு வந்தார். ஊரே அவரை பார்க்க ஓடி வந்தது. சிவகாமியும் அவரிடம் மன்னிப்பு கேட்க ஓடினார் குடும்பத்துடன். அந்த சாமியார் உடனே அந்த வழக்கு வாபஸ் வாங்குமாரு கூறினார். இல்லை என்றால் இந்த குடும்பமே இந்த அகிலாண்டேஸ்வரி கோவத்துக்கும் சாபத்துக்கும் ஆளாவீர்கள் என்று மிரட்டினார். ஆனால் சரவணன் அதற்கும் உன் உண்மையான முகம் எனக்கு தெரியும் என்று கூறினார். ஆனால் ஊர்க்காரர்கள் சந்தியா சரவணன் இருவரையும் திட்டித்தீர்தார்கள். சிவகாமியை எதுத்து பேசினார் சரவணன். இதை சிவகாமியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…