Mouna Ragam 2 Today Episode | 18.07.2022 | Vijaytv

Mouna Ragam 2. 18.07.2022

Mouna Ragam 2. 18.07.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, கார்த்திக் மருத்துவமனையில் கண் முளித்தார். உடனே ஸ்ருதி, தருண், சக்தி மற்றும் வருண் உள்ளே சென்று பார்த்தார்கள். ஸ்ருதி அழுது புலம்பினார். ஆனால் அவரை கண்டுகொள்ளாமல் சக்தியை அழைத்தார் கார்த்திக். அதை பார்த்த ஸ்ருதிக்கு கோவம் கொந்தளித்தது. மேலும் சக்தியிடம் மட்டுமே பேசினார் கார்த்திக். என்னை எத்தனை வருடங்கள் கழித்து அப்பா என்று அழைதாய் என்று மிகவும் சந்தோசமாக கூறினார். ஆனால் இதை எல்லாம் பார்த்த ஸ்ருதி கோவத்தில் அந்த இடத்தை விட்டு கிளம்பினார். அவரை தருண் சமாதானம் செய்தார். மல்லிகா சாமி கும்பிட்டு கொண்டு இருந்தார். கார்த்திக்கு எப்படியாவது குணமடைய வேண்டும் என்று வேண்டினார். அதற்குள் காதம்பரி, ருக்மணி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களை பார்த்த ஸ்ருதி அழுது தீர்த்தார். மேலும் கார்த்திக் தன்னை மதிக்கவ் இல்லை, சக்தியை தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த காதம்பரு உடனே கிளம்பினார். போகும் வழியில் மல்லிகாவின் பார்த்து சீறினார். ஆள் வைத்து கார்த்திக்கை கத்தியால் குத்தி அவரை இங்கேயே உன்னுடன் வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம் போட்டு விட்டதாக கத்தினார். ஆனால் அதற்குள் சக்தி அங்கு வந்து அந்த ரௌடி யார் என்று போலீஸ் பார்த்துக்கொள்ளும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author