ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமம் தொடரில் இன்று, சாமியார் இடம் தனியாக சரவணன், சந்தியா, பாரதி, கண்ணம்மா நால்வரும் பேசினார்கள். வேண்டும் என்றே சந்தியா கேசை வாபஸ் வாங்க விக்க வேண்டும் என்று திட்டம் போட்டு குடும்பத்தை அசிங்க படுத்தி இருக்கிறான் என்று கூறினார்கள். ஆனால் அந்த சாமியார் தனக்கு எந்த வித கருத்துக்களும் தேவை இல்லை என்றார். ஆனால் பூமி பூஜை நடத்த வேண்டும் அடுத்த திட்டங்களை நகர்த்த வேண்டும். ஆனால் அதை தடுத்து நிறுத்தி என் திட்டத்தையே வீணாக்கிவிட்டீர்கள் என்று கோவத்தில் கத்தினார். அப்போதும் சந்தியா அந்த கேசை வாபஸ் வாங்க முடியாது என்று கூறினார். உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்துகொள் என்றார் சரவணன். பின் பாரதி கண்ணம்மா இருவரும் அவர்கள் அறைக்கு செல்ல கிளம்பினார்கள். சரவணன் மற்றும் ஸ்னதிய இருவரும் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்கள். ஆனால் பாரதி சிரமம் வேண்டாம், காலையில் வருகிறோம் என்று கிளம்பினார்கள். ஆனால் பாரதி முன் பதிவு செய்து இருந்த ஹோட்டலில் இனி அவர்களுக்கு அறை இல்லை என்றார்கள். சரி வேறு இடம் பார்க்கலாம் என்று தேட ஆரம்பித்தார்கள். ஆனால் எல்லா இடத்திலும் ஒரே பதில் தான் கூறினார்கள். காரணம் அறை இல்லாமல் இல்லை, சாமியாரை எதிர்த்து பேசியவர் என்றும், அந்த சிவகாமி குடும்பத்தில் ஒருவர் என்றும், அந்த சாமியார் இவர் குடும்பத்தில் யாருடனும் பேச்சு வார்த்தை கொடுக்கல் வாங்கல் என எதுவும் இரக்க கூடாது என்று கூறியதால் இவர்களுக்கு தங்கவும் இடம் கிடைக்க வில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…