Raja Rani 2 & Barathi Kannamma Sangamam Today Episode | 22.07.2022 | Vijaytv
Raja Rani 2 barathi Kannamma. 22.07.2022
ராஜா ராணி 2 & பாரதி கண்ணம்மா சங்கமத்தில் இன்று, ஊர்காரர்கள் சேர்ந்து சிவகாமி அம்மாவின் வீட்டையே ஒதுக்கி வைத்தார்கள். பால், மளிகை, கரெண்ட், கடையை அடைப்பது என்று அவர்களை அந்த வீட்டை விட்டு எங்கும் போகாத விதமாக செய்தார்கள். இதை நினைத்து அழுது கொண்டு இருந்த சிவகாமிக்கு ஆறுதல் சொல்ல பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் பேசி பார்த்தார்கள். சரவணன் சந்தியாவை அப்படி பேசி இருக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் சிவகாமி தான் கூறியது போல் ந்த கேசை வாபஸ் வாங்கினால் மட்டுமே நானும் என் வார்த்தைகளை வாபஸ் வாங்குவேன் என்று கூறினார். இதை கேட்டு சரவணன் சந்தியா இருவருமே நொந்து போனார்கள். பின் கண்ணம்மா குழந்தைகளுக்கு சுடு தண்ணீர் போட வேண்டும் என்று கூறினார். ஆனால் மயில் சிலிண்டர் தீர்ந்து விட்டதாக கூறினார். அதனால் வெளியே விறகு அடுப்பு வைத்து தண்ணீர் வைக்க ஆரம்பித்தார்கள். அப்போது சந்தியா வெளியே காய்ந்து கொண்டு இருந்த வரட்டியை எடுத்து வந்தார். அதில் எதோ minnuvafhu போல் தெரிந்தது. கண்ணம்மா அதை கவனித்து அதற்குள் இருந்த நகைகளை கண்டு பிடித்தார்கள். இந்த வேலையை நம் வீட்டில் இருக்கும் யாரோ ஒருவர் தான் செய்து இருக்க வேண்டும் என்றும், இது போல் செய்யும் ஒரே ஆள் அர்ச்சனாவாக தான் இருக்கும் என்றும் கூறினார் சந்தியா. அந்த நேரத்தில் அர்ச்சனா தன் நகைகளை தேடி வரட்டி இருக்கும் இடத்துக்கு போனார். போனதும் அவருக்கு அதிர்ச்சி. அங்கு ஒரு வரட்டியும் இல்லை. உடனே மயிலை அழைத்து கேட்டார். சூடு தண்ணீர் வைக்க எடுத்து விட்டதாக மயில் கூறினார். உடனே அர்ச்சனா அந்த அடுப்பில் இருக்கிறதா என்று தொண்ட ஆரம்பித்தார். பாரதியின் அம்மா அப்பா தம்பி அஞ்சலி என்று அனைவரும் இரண்டு மாசத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து கொடுத்தார்கள். அவர்களும் சிவகாமிக்கு துணையாக இருப்போம் என்று கூறினார்கள். இதற்கிடையில் பார்வதிக்கு அவரது தோழி ஒருவர் அழைத்து அந்த சாமியார் இடம் இருந்து சாபத்தை நீக்க ஒரு வழி சொல்வதாக அழைத்தார். வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பார்வதியும் கிளம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.