Eeramana Rojave 2 Today Episode | 26.07.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தேர்வில் வெற்றி பெற்றதற்காக ஜீவா அவருக்கு கேக் வாங்கி வந்து வீட்டில் கொண்டாடினார்கள். பார்த்திபன் அதை பார்த்து காவ்யா இன்னும் கொஞ்ச நாளில் கலெக்டர் ஆனதும் இந்த ஊரே திரும்பி பார்க்கும் அளவுக்கு பெரிதாக கொண்டாடுவேன் என்றார். அடுத்த நாள் kavya அவரது அறையில் தண்ணீர் வரவில்லை என்று பிரியா விடம் அவரது அறையில் குளிக்க அனுமதி கேட்டார். அவரும் ஜீவா வேலைக்கு போய் விட்டார் நீ குளி என்று கூறினார். ஆனால் காவ்யா குளிக்க சென்ற பின் ஜீவா மீண்டும் அவரது அறைக்கு ஒரு வேலையாக வந்தார். அப்போது காவ்யாவை பார்த்து என்ன சொல்வதென தெரியாமல் நின்றார். அந்த சமயம் பிரியா அங்கு வந்து காவ்யா அறையில் தண்ணீர் வரவில்லை என்பதால் இங்கு குளிதார் என்று கூறினார். பின் காவ்யா அவரது அறைக்கு போன நேரத்தில் அவருடைய செயின் பிரியா அறையில் இருப்பதை கவனித்து மீண்டும் பிரியா அறிக்கு வந்தார். ஆனால் வந்த இடத்தில் அங்கு பிரியா மீது பல்லி விழுந்ததால் அவர் ஜீவா மீது அவர் தவறி விழுந்து புரண்டார். அந்த நேரம் காவ்யா வந்து பார்த்து மிகவும் சங்கட பட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author