Eeramana Rojave 2 Today Episode | 28.07.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா துணியை துவைத்து காய வைத்து அதை இஸ்திரியும் போட்டார் பார்த்திபன். காவ்யா கடைக்கு போய் வந்ததும் பார்வதி அவரை பார்த்து விஷயத்தை கூறினார். பார்த்திபனை நினைத்தால் எனக்கு பதட்டமாக உள்ளது என்றார். மேலும் காவ்யாவை முடிந்த வரை சீக்கிரமே அவன் வாழ்க்கையை விட்டு கிளம்பும்படி கூறினார். உடனே காவ்யா பார்த்திபனை பார்த்து திட்ட ஆரம்பித்தார். தன் பொருட்களை எதற்கு எடுக்க வேண்டும். என் துணியை துவைக்க நான் சொல்லவே இல்லையே என்று கூறினார். மேலும் இது போல் செய்ய வேண்டாமா என்று கடிந்து கொண்டார். ஆனால் பார்த்திபன் அதையும் விளையாட்டாக பேசி சமாளித்தார். ஜீவா தேவி இடம் நடந்ததை விசாரித்தார். இன்று நரேன் உடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்ததாக கூறினார். அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார். ஆனால் தேவி தனக்கு நரேன் யார் என்றே தெரியாது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author