Jiதமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரையும் மன்னித்து ஏறுக்கொண்டதால் நடேசன் அளவில்லா ஆனந்தம் கொண்டார். இந்த நாளுக்காக தான் இத்தனை நாளாக காத்து இருந்தார் என்று கூறினார். ஆனால் அவர் பேசி முடித்ததும் கோதை, தன் மனதில் இருப்பதை கூறினார். தான் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரையும் முழு மனதோடு மன்னிக்கவில்லை என்று என்றும், இனியும் அப்படி மன்னிக்க முடியாது என்றும் கூறினார். இதை கேட்ட நடேசன் அதிர்ச்சி அடைந்தார். வெளியில் பேசியது நடேசன் மனம் கஷ்ட பட கூடாது என்று நினைத்ததாக கூறினார். மேலும் கீதா முன் தன் பிள்ளைகளை விட்டு கொடுக்க முடியாமல் தான் அப்படி சொன்னதாக கூறினார். ஆனால் இது தெரியாமல் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இன்று இரவே முதல் இரவு ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் அதை தடுக்க நினைத்த சந்திரகலா எப்படியாவது தமிழை ஒரு விபத்தில் சிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…