இந்தியாவின் 49 ஆவது தலைமை நீதிபதி ஆகிறார் யு யு லலித்!

U U Lalit Named As 49th CJI

U U Lalit Named As 49th CJI

இந்தியாவின் 49 ஆவது தலைமை நீதிபதியாக யு யு லலித் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிற்கு வரும் 26 ஆம் தேதி பதவிக்காலம் முடியும் நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் யு யு லலித் அவர்கள் அடுத்து 49 ஆவது தலைமை நீதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதியிலிருந்து அவர் பணியை துவங்க இருக்கிறார்.

“ மேலும் யு யு லலித் அவர்கள் 74 நாட்கள் மட்டுமே பதவியில் நீடிப்பார் எனவும் அறியப்படுகிறது. காரணம் அவர் நவம்பர் 8 ஆம் தேதி ஓய்வு பெற இருப்பதாக தெரிகிறது “

About Author