5 மாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் விடுதலை!

2002 Coummunal Riots In Gujarat

2002 Coummunal Riots In Gujarat

சுதந்திர தின பெருநாளில் 5 மாத கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்து 3 வயது சிறுமியை கொன்றவர்கள் விடுதலை செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

2002 குஜராத் கலவரத்தின் போது 19 வயது மிக்க இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவரை 11 பேர் சேர்ந்த கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி அவர்களின் குடும்பத்தில் 3 வயது சிறுமி உட்பட 14 பேரை கொலை செய்து இருந்தது. அவர்களின் தண்டனைக்காலம் முடிந்ததாகவும், அவர்களின் நன்னடத்தையும் சுட்டி காட்டி பிரதமர் மோடி அரசு அவர்களை விடுவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

” 19 வயது கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்து, 3 வயது சிறுமியோடு சேர்த்து 14 பேரை கொன்றவர்களிடம் இந்த மோடி அரசு என்ன நன்னடத்தையோ கண்டதோ தெரியவில்லை, என்பது தான் இங்கு பலரின் கேள்வியாக இருக்கிறது “

About Author