ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் சந்தியா இருவரும் ஜெஸ்ஸி எங்கள் வீட்டு பெண். அவள் வயிற்றில் வளர்வது எங்கள் வீட்டு வாரிசு என்று கூறினார். இதனால் ஜெஸ்ஸியின் அப்பா அம்மாவுக்கு அவர்கள் மீது ஒரு நல்ல மதிப்பு மற்றும் மரியாதை வந்தது. பின் ஆதி மாற்றும் essy இருவரது திருமணம் கூடிய விரைவில் நடக்கும் என்று கூறினார். பின் வீட்டுக்கு திரும்பினார்கள். செந்தில் ஆதி செய்த தவறை நினைத்து வருந்தினார். மேலும் அந்த பொண்ணுக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது என்று புலம்பினார். அப்போது அர்ச்சனா தனக்கு இந்த விஷயம் முன்னதாகவே தெரியும் என்றார். அவர்கள் காதலித்தது தெரியும் ஆனால் வயிற்றில் குழந்தை இருப்பது தெரியாது என்று கூறினார். வீட்டில் அனைவரும் மீண்டும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது சிவகாமியின் மாமியார் தன் பேரன் எந்த தவறும் செய்ய வில்லை என்பது போல பேசினார். அதான் அவன் செய்த தவறை உணர்ந்து ஒத்துக்கொண்டான் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல் பேசினார். பின் சிவகாமி மீண்டும் தான் போட்ட கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டால் மட்டும் தான் இந்த திருமணம் நடக்கும் என்று கூறினார். அந்த நேரம் அங்கு சக்கரை பதட்டமாக ஓடி வந்தான் . அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…