Mouna Ragam 2 Today Episode | 12.09.2022 | Vijaytv

Mouna Ragam 2. 12.09.2022

Mouna Ragam 2. 12.09.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் கொடுத்த திட்டப்படியே கார்த்திக் டிவியில் தனக்கும் காதம்பரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனியும் அவர் தன்னை தொந்தரவு செய்தால் சட்ட பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பேன் எண்ட்பது போல் பேசினார். இதை டிவியில் பார்த்த காதம்பரி ஒரு பக்கம் கொந்தளித்தார். அதே போல் ஸ்ருதியும் அவரது வீட்டில் அதை பார்த்து விட்டு கொந்தளித்ததார். இது எல்லாமே மல்லிகாவின் வேலையாக தன இருக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் வருண் மல்லிகா எதுவும் செய்யவில்லை. இந்த திட்டம் போட்டு கொடுத்ததே நான் தான் என்றார். எதற்கு இப்படி செய்தாய் என்று ஷீலா கேட்க, உடனே விஸ்வநாதன் பார்க்கும் இடம் எல்லாம் சக்தி மற்றும் மல்லிகாவை கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். மேலும் காதம்பரி கார்த்திக் வீட்டுக்கே சென்று மல்லிகா கழுத்தை பிடித்து நெரிக்கிரார். இதை எல்லாம் பார்த்தும் அமைதியாக இருக்க முடியாது என்று கூறினார். இதை கேட்டதும் ஸ்ருதியை விட தருண் தன் அதிகமாக கோவம் கொண்டார். பின் ஸ்ருதிக்கு ஆறுதல் கூறுவதற்காக சக்தி அவரிடம் பேசி பார்த்தார். ஆனால் ஸ்ருதி எப்போதும் போல அவரை திட்டவே செய்தார். பின் இன்றே வருண் நிலை மோசமாக்க வேண்டும் என்று அவர் கொடுக்க போகும் மாத்திரைக்கு காத்திருந்தார். பின் காதம்பரி வீட்டுக்கு சென்றார் ஸ்ருதி. அங்கு சென்று இந்த திட்டத்தை போட்டு கொடுத்ததே வருண் தான் என்றார். இதை கேட்டதும் முதலில் வருண் தான் இனி நமக்கு முதல் எதிரி, அவனை கொலை செய்ய வேண்டும் என்று கூறினார் காதம்பரி. அதன் படி விஸ்வநாதன் அவன் கதையை நாளைக்கே முடிப்பேன் என்று கூறினார் விஸ்வநாதன். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author