’வதந்திகளால் நிறையவே அழுது இருக்கிறேன்’ – ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் குறித்த வதந்திகள் குறித்து பேசி இருக்கிறார்.

’செய்யாத ஒன்றை செய்ததாக பரப்பி வதந்திகள் செய்வதையே இன்றைய சமூக வலைதளங்கள் பொழுது போக்காக கொண்டு இருக்கின்றன. என்னை பற்றியும் நிறையவே வதந்திகள் பரவின. நிறையவே அழுது இருக்கிறேன்’ என்று நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

“ அவர் சொல்வதும் உண்மை தான், ஆண் நடிகர் என்ற போதும் கூட பரவாத வதந்திகள் எல்லாம், பெண் நடிகர் என்றால் தீ போல பரவுகிறது. வதந்திகளில் கூட பாகுபாடு உண்டு போல “

About Author