ராஜா ராணி 2 தொடரில் இன்று, சிவகாமி அம்மா தன் மகன் மருமகள் இருவரையும் அந்த கோப்பை இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்து நிறுத்தினார். இந்த இடத்தில் நடக்கும் எல்லாம் போட்டிகளிலும் நீ வெற்றி பெற்று சிறந்த போலீஸ் ஆக வேண்டும். போது தான் இந்த கோப்பையை நீ வெல்ல முடியும் எனவும், இதன் மூலம் நீ நம்ம சொந்த ஊரிலேயே வேலை பார்க்க ஒரு சலுகையும் கிடைக்கும் என்றார். அதனால் கண்டிப்பாக இந்த கோப்பையை நீ வாங்கியே ஆக வேண்டும். இதை விட்டால் உனக்கும் வேறு வழி இல்லை, எனக்கும் வழி இல்லை ஏனென்றால் வேறு ஊருக்கு உன்னை வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றார். பின் அனதியாவும் யோசித்து தான் உயர்ச்சி செய்து அந்த கோப்பையை கண்டிப்பாக வாங்குவேன் என்று சத்தியமும் செய்து கொடுத்தார். பின் அனைவரும் சாப்பிட கிளம்பினார்கள். அங்கு போலீஸ்காரர்கள் தனியாக ஒரு சாபப்டு மற்றவர்களுக்கு வேறு இடத்தில் சாப்பாடு என்று பிரித்து வைத்து இருந்தார்கள். இதனால் அனதிய தனியாக சாப்பிட வந்தார். வந்த இடத்தில் அப்துல் பற்றி அவருக்கு தெரிய வந்தது. இது வரை பயிற்சிக்கு வந்தவர்களில் மிகவும் திறமை உள்ளவர் அப்துல் எனவும், இவர் தான் அந்த கோப்பையை வாங்க தகுதி உள்ளவர் எனவும் பேசிக்கொண்டார்கள். அதை கேட்டதும் சந்தியா லேசாக கவலை கொண்டார். பின் சரவணன் மற்றும் சந்தியா இருவரும் இனி எத்தனை மாசத்துக்கு இந்த பிரிவு என்றும், எப்படி ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க போகிறோம் என்றும் கவலை பட்டர்கள். ஆனால் சரவணன் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சந்தியாவை ஊக்கப்படுத்தினார். பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த சொன்னார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…