ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, கோர்ட்டில் பிரியாவை விசாரித்ததில் அவரை நலன் கடத்தியதாக கூறினார். ஆனால் நலனை விசாரித்தால், தானும் பிரியாவும் காதலித்ததாக கூறினார். பிரியா தான் திருமணத்தன்று தன்னை திருமணம் செய்ய அழைத்ததாக கூறினார். மேலும் தேவி யார் என்றே எனக்கு தெரியாது. தேவி பெயரை போலீசில் சொல்ல வேண்டும் என்று ஜீவா தான் என்னை மிரட்டினான் என்று கூறினார். பின் தேவியும் தனக்கும் நலனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். ஜீவா என் மேல் உள்ள கோவத்தில் தான் இப்படி ஒரு விஷயத்தை செய்து உள்ளான் என்று கூறினார். அதையும் ஜட்ஜ் நம்பி அவரை வெளியே அனுப்பினார்கள். வெளியே தான் நிரபராதி என்று கூறி அருணாச்சலம் இடம் கோவமாக பேசினார். இனிதான் தன் சுயரூபம் உனக்கு தெரிய வரும் என்று மிரட்டலாக பேசினார். பின் வீட்டுக்கு திரும்பிய தேவியை வீட்டுக்குள் வர வேண்டாம் என்று தடுத்தார் ஜீவா. நீங்கள் செய்த துரோகத்தை இந்த வீட்டில் யாரும் மறக்க முடியாது. இதற்கு மேலும் இந்த வீட்டில் தேவி இருக்கவே கூடாது என்று கூறினார். இதனால் ஜீவா மற்றும் ஜே. கே இருவருக்கும் அடிதடி சண்டை வர ஆரம்பித்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…