ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் அவரது கடையில் இருக்கும் போது ஊர் பெரியவர்கள் சிலர் வந்து அவரிடம் பேசினார்கள். இந்த முறை வியாபார சங்க தலைவர் போட்டியில் சரவணன் தான் நிக்க வேண்டும் என்று கூறினார்கள். சரவணன் அதை முதலில் தயக்கமாக கேட்டார். ஆனால் பின் அவரது வீட்டில் அம்மா அப்பாவிடம் கேட்டு முடிவு சொல்வதாக கூறினார். பின் சற்று நேரத்திலே ஏற்கனவே வியாபார சங்க தலைவராக இருந்தவர் வந்து சரவணனை மிரட்டினார். நீ அந்த தலைவர் போட்டியில் நிக்கக்கூடாது என்று கூறினார். ஆனால் சரவணன் அதற்கு பதிலடி கொடுத்து அனுப்பினார். சந்தியா தனக்கு தானே பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். அப்போதும் அப்துல் வரை மட்டம் தட்டியே பேசினார். இவரால் தான் எங்கள் குழுவிற்கு குறித்த மதிப்பெண் என்று கூறினார். சந்தியா இந்த போலீஸ் வேலைக்கு சரி பட்டு வராமட்டார் என்று கூறினார். ஆனால் சந்தியா அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்து துப்பாக்கி எப்படி பயன்படுத்துவது என்று பயிற்சி நடந்தது. அதில் சந்தியா முயற்சி செய்து விட்டு அது சரியாக வேலை செய்யவில்லை என்று கீழே வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…