Raja Rani 2 Today Episode | 25.11.2022 | Vijaytv
Raja Rani 2. 25.11.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வெளியே சாப்பிட சென்று அந்த இடத்தில் நடந்த கலவரத்தால் குழப்பத்தில் இருந்தார். தன் குடும்பம், தன் மாமியார் இந்த பிரச்சனைக்கு என்ன சொல்வார் என்று புரியாமல் இருந்தார். சிவகாமி அம்மா வீட்டுக்கே சில பேர் வந்து உன் மூத்த மருமகள் பெரிய போலீஸ் அதிகாரி ஆகி வீட்டுக்கு திரும்புவார் என்று நினைத்தால், இப்படி குடித்து விட்டு கும்மாளம் போட்டு ஊரே டிவியில் பார்க்கும்படி செய்துவிட்டாரே என்று குத்தலாக பேசினார்கள். அர்ச்சனா மேலும் அதை பெரிதுபடுத்தினாள். கண்டிப்பாக பெரிய குடிகாரியாக வருவாள் என்று நக்கலாக பேசினார். ஆனால் சிவகாமி என் மருமகளை பற்றி எனக்கு தெரியும். அவள் என்ன செய்வாள் எதை செய்ய மாட்டாள் என்றும் தனக்கு தெரியும் என்று கூறினார். யாரிடமும் சந்தியாவை விட்டுக்கொடுக்காமல் பேசினார். வந்தவர்கள் மூக்கு உடைந்து போகும் அளவுக்கு பேசினார். பின் சந்தியாவுக்கு வீடியோ கால் செய்து பேசினார். நீ எதை பற்றியும் கவலை பட வேண்டாம். உன்னை பற்றி எனக்கு தெரியும். உன் கவனம் முழுதும் இந்த பயிற்சியில் தான் இருக்க வேண்டும். வேறு எங்கும் சிதற வேண்டாம் என்று அறிவுரை கூறினார். மேலும் எப்போதும் நன்றிகள் உனக்கு துணையாக இருப்போம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….
About Author
Auto Amazon Links: No products found.