தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் தனக்கு இந்த வீட்டில் இருப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்று கூறினார். தனக்கு இந்த வீட்டில் எந்த ஒரு மரியாதை குறிவும் நடக்காது என்று கோதை நடேசன் இருவரும் தன்னை மகன் போல் பார்த்துக்கொள்வார்கள் என்றும் கூறினார். பின் இந்த வீட்டிலே மகளும் மருமகனும் தங்க போவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டில் இருக்கும் ஒரு துளசிச்செடி வடிப்போய் இருந்தது. அதை பார்த்ததும் சரஸ்வதி எதோ ஒன்று தவறாக நடக்கிறது என்று நினைத்தார். ஆனால் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. அர்ஜுன் குடும்பத்துக்கு ஒரு அறையை கொடுத்து அவர்களுக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்தார்கள். பின் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பம் மொத்தமும் இந்த குடும்பத்தில் உள்ள எல்லா சொத்தையும் அவர்களே அபகரிக்க வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். மேலும் 10 நாள் என்பதை எப்படியும் அதிகரித்து இங்கேயே உங்களை தாங்க வைத்து விடுவேன் என்று அர்ஜுன் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….