Eeramana Rojave 2 Today Episode | 13.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்த அருணாச்சலம் வீட்டில் புலம்பி தள்ளினார். எப்படியும் காவ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிட வேண்டும் என்று கூறினார். ஆனால் பார்வதி இப்படி அனைவர் மனமும் காவ்யா நல்லவள் என்று மாறிவிட்டார்கள் என்று வருந்தினார். அதனால் காவ்யாவுக்கு அழைத்து கண்டிப்பாக நீ வரவே கூடாது என்று கூறினார். பார்த்திபன் ஒவ்வொரு பேருந்திலும் தேடி கடைசியில் பெங்களூரு செல்லும் பேருந்து கிளம்பிய நிலையில் அதையும் பார்க்க ஓடினார். கடைசியாக ஆதில் காவ்யாவை பார்த்து அழைத்தார். தான் செய்தது தவறு தான் என்று கூறினார். காவ்யாவை தன்னோடு வீட்டுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அதை காவ்யா மறுத்துவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..

About Author