Mouna Ragam 2 Today Episode | 15.12.2022 | Vijaytv

Mouna Ragam 2. 15.12.2022

Mouna Ragam 2. 15.12.2022

மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் நிலையை பார்த்து சொர்ணம் மிகவும் வருந்தினார். தன்னையும் உனக்கு ஞாபகம் இல்லையா என்று கேட்டார். பின் சக்தி என்று அவர் சொன்ன வார்த்தையை கேட்டதும் மீண்டும் வருண் கத்த ஆரம்பித்தார். சக்தி என்ற பெயரை கூட அவர் கேட்க முடியவில்லையே என்று சொர்ணம் வருந்தினார். விஸ்வநாதன் காதம்பரி இருவரும் வீட்டுக்கு திரும்பும் வழியில் மல்லிகா கார்த்திக் இருவரும் சேர்ந்து கடையில் நிற்பதை பார்த்தார்கள். அதை பார்த்ததும் கோவத்தில் கொந்தளித்தார் காதம்பரி. இனியும் இந்த மல்லிகாவை உயிரோடு விடமாட்டேன் என்று கத்தினார். பின் அவரை சமாதானம் செய்து வைத்தார் விஸ்வநாதன். வீட்டுக்கு வந்ததும் அதே கதறல் தான். தன்னோடு எங்குமே வராத கார்த்திக் இப்போது மல்லிகாவோடு ஊர் சுற்றுகிறார் என்று கத்தினார். பின் மல்லிகா மற்றும் கார்த்திக் இருவரும் வருண் இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். மருத்துவரிடம் பேசி நாளை வருண் வீட்டுக்கு கிளம்பலாம் என்று கூறினார்கள். மேலும் சக்தியை பார்த்தாலே வருண் கத்துவதை பார்த்த மல்லிகா மனம் நொந்து கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author