மௌன ராகம் 2 தொடரில் இன்று, வருண் வீட்டுக்கு வந்து அவரது அம்மாவை பார்த்து விட்டால் கண்டிப்பாக அவர் சரியாகிவிடுவார் என்று குடும்பமே நம்பியது. ஸ்ருதி தன் அம்மா மற்றும் பாட்டி இடம் இதை பதட்டமாக கூறினார். ஒரு வேளை இருவரும் சந்தித்தால் வருண் சரி ஆகி விடுவாரோ என்று கேட்டார். ஆனல் ருக்மணி அதற்கு வாய்ப்பே இல்லை என்றார். அந்த அளவுக்கு மாத்திரையை கொடுத்து வருண் உடலை கெடுத்து வைத்து இருக்கிறாள் என்று உறுதியாக கூறினார். பின் வருண் வருவதற்காக மனோகர் ஆவலாக இருந்தார். மேலும் வருண் வந்ததும் கஸ்தூரியை அழைத்து வந்து வருண் முன் நிறுத்தினார்கள். ஆனல் வருண் அவரை பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார். அவரது அம்மாவை அவருக்கே அடையாளம் தெரியாமல் போனது. வருண் யார் பேசுவதையும் கேட்கவில்லை, அவரது அம்மா முகத்தையும் பார்க்கவில்லை. உடனே அங்கு இருந்து கிளம்பினார். இதனால் மனோகர், சக்தி மல்லிகா என்று அனைவருமே மனம் நொந்து போனார்கள். கஸ்தூரியை பார்த்தால் வருண் குணம் அடைய வாய்ப்பு உள்ளது என்று நினைத்தோம், ஆனால் அது நடக்காதோ என்று ஸ்கதி புலம்ப ஆரம்பித்தார். வரை கார்த்திக் மற்றும் மல்லிகா இருவரும் சமாதானம் செய்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…