Mouna Ragam 2 Today Episode | 23.12.2022 | Vijaytv

மௌன ராகம் 2 தொடரில் இன்று, சக்தி கோவத்தில் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து கத்த ஆரம்பித்தார். வருண் இப்படி இந்த நிலையில் இருப்பதற்கு விஸ்வநாதன் தான் காரணம் என்று அந்த பெண் ஒத்துக்கொண்டார் என்று கூறினார். ஆனல் விஸ்வநாதன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் வழியில் குறுக்கே வந்தால் யாருக்காக இருந்தாலும் இதுதான் நிலை என்று திமிராக கூறினார். மனோகர் அதை கேட்டு அவர் பங்குக்கு கத்தினார். என் மகனை இந்த நிலைக்கு ஆக்கி விட்டு நீ எப்படி நிம்மதியாக இருக்கலாமா. உன்னை சும்மா விட மாட்டேன், எனக்கு தெரிந்த ஆளை வைத்து சட்டப்படி என்ன செய்கிறேன் பார் என்று கூறினார். வருண் கூடவே இருந்து நானும் அவரும் சேர்ந்து கண்டிப்பாக சந்தோசமாக வழந்து காட்டுவோம் என்று சக்தி சபதம் எடுத்தார். அதே நேரம் ஸ்ருதி கஸ்தூரி தனியாக இருக்கும்போது சக்தி தவறானவர் என்று மீண்டும் மீண்டும் கஸ்தூரியிடம் கூறினார். அவரது மனதில் சக்தி நல்லவள் இல்லை என்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிவு செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author