Eeramana Rojave Today Episode | 30.12.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, தல தீபாவளி எல்லாம் முடித்து வீட்டுக்கு ஜோடிகள் திரும்பினார்கள். பார்த்திபன் தன் கையில் அடிபட்டதை காரணமாக வைத்து காவ்யா தனக்கு சாப்பாடு ஊட்டி விடும்படி கேட்டார். அதையும் காவ்யா தவிர்க்க முடியாமல் செய்தார். அந்த நேரம் பார்த்து பார்வதி அங்கு வந்து காவ்யாவை பார்த்து முறைக்க ஆரம்பித்தார். தன் மகனை விட்டு விலகி செல்ல வேண்டும் என்று நாம் இத்தனை முறை கூறியும் அவள் இந்த அளவுக்கு நெருங்கி பழகுகிறார் என்று கோவத்தில் இருந்தார். பின் இந்த கையில் அடிபட்டது கூட காவ்யாவால் தான் என்று திட்டினார். பின் சாப்பாட்டை பிடிங்கி தானே தன் மகனுக்கு ஊட்டிக்கொள்வேன் என்று கூறினார். அடுத்த நாள் பார்த்திபன் நண்பருக்கு திருமணம் என்று காவ்யா, பார்த்திபன், அருணாச்சலம், பார்வதி என்று அனைவரும் வந்து இருந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author