ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் மற்றும் செந்தில் இருவரும் இரு துருவங்களாக அவரவர் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார்கள். அப்போது கூட பரவந்தாமன் வேண்டும் என்றே சரவணனை வம்புக்கு இழுத்தார். அடுத்து சந்தியா காட்டுப்பகுதியில் அடுத்த பயிற்சிக்கு தயார் ஆனார்கள். இன்று துப்பாக்கியை வைத்து குறி பார்த்து சுடுவதற்கான பயிற்சி. அதில் சந்தியா சரிவர செய்யவில்லை. அதனால் கௌரியே களத்தில் இறங்க சந்தியாவை முயற்சி செய்ய வைத்தார். குறி பார்க்கும் இடத்தில் அவரே அட்டையை வைத்து குறி பார்த்து சுட வைத்தார். ஆனால் அந்த நேரம் பார்த்து யாரோ ஒருவர் கௌரி கையில் சுட்டார்கள். அந்த பழியும் சந்தியா மேல் விழுந்தது. ஆனால் உண்மையில் கௌரியை சுட்டது சேட்டா தான். அடுத்து கெளரியை தீவிரவாதிகள் கைப்பற்றியது போல் அவரே ஒரு naadagm நடத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….