தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா வீட்டுக்கு விருந்துக்கு கிளம்பினார்கள். சந்திரகலா வீட்டை பார்த்து ஆச்சர்யப்படார்கள் அர்ஜுன் குடும்பத்தினர். அதிலும் அவர் பரம்பரை பணக்காரர்கள் என்பதால் அது தோரணையில் தெரிகிறது என்று கூறினார்கள். ஆனால் இங்கு எப்படி விருந்து சாப்பிட அர்ஜுன் ஒத்துக்கொண்டார் என்று புரியாமல் இருந்தார்கள். பின் அர்ஜுன் அதற்கும் ஒரு திட்டம் வித்து இருப்பதாக கூறினார். இந்த கார்த்திக்கை அந்த கம்பேனியை வாங்கி வைக்க சந்திரகலா மூலமாக தான் காயை நகத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு அம்மா பேசும் விதமாக பேசினால் போதும் என்றார். பின் விருந்து சாப்பாடு பலமாக இருந்தது. அப்போது அர்ஜுன் அம்மா வேண்டும் என்றே கார்த்திக் ஒரு கம்பேனி வாங்க நினைப்பது, அதை வீட்டில் தடுப்பது என்று அனைத்தையும் அவர் கூறினார். அதை கேட்டதும் சந்திரகலா ஒரு திட்டம் போட ஆர்மாபித்தார். இதற்கு இடையில் சரஸ்வதியிடம் வசுந்தரா சின்ன விஷயங்களுக்கு சண்டை போட ஆரம்பித்தார். அதே நேரம் கார்த்திக் பல இடங்களில் 12 கொடியை கடன் வாங்கி எப்படியாவது அந்த கம்பேனியை வாங்க வேண்டும் என்று முயற்சி செய்தார். அப்போது சந்திரகலா தானே உதவுகிறேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….