ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜே.கே எந்த தவறும் செய்யவில்லை என்று குடும்பத்தில் அனைவர் மத்தியிலும் ஐஸ்வர்யா கூறினார். இதனால் தேவி நான் கொண்டு வந்த ஜே.கே மீது எந்த தவறும் இல்லை, அவனை அசிங்கமாக பேசியதற்கு அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். அருணாச்சலம் தான் செய்தது தவறு தான் என்று தேவியிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் ஜே.கே விடம் மன்னிப்பு கேட்கவும் தயங்கவில்லை. ஆனால் ஜே. கே வயதில் பெரியவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம், எனக்கு பார்த்திபன் மற்றும் ஜீவா தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். பார்த்திபன் தான் செய்தது தவறு என்று மன்னிப்பும் கேட்டார். ஆனால் ஜீவா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….