ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா காட்டுக்குள் மீண்டும் வந்த பின் தான் தனது கணவனையும் அந்த கும்பல் கைபற்றி இருப்பது தெரிய வந்தது. அவர் மனம் உடைந்து போனார். ஆனால் அவரோடு இருந்த போலீஸ்காரர்கள் அவரை சமாதானம் செய்து வைத்தார்கள். அதே நேரம் சரவணன் மற்றும் கௌரியை ஒரே இடத்தில் கட்டிப் போட்டு வைத்தார்கள். ஆனாலும் இருவருமே சந்தியா எங்களை காப்பாற்றுவார் என்று உறுதியாக நம்பினார். ஜோதி தன் கூட்டத்தை மற்றும் இல்லை, என்னையும் இவர்கள் ஏமாற்றி முட்டாள் ஆக்கி உள்ளர்கள். அதற்கான தண்டனை இவர்களுக்கு நானே கொடுப்பேன் என்று கூறினார். இந்த சரவணனை என் கையால் கொலை செய்வேன் என்று கூறினார் ஜோதி. பத்திரிக்கை ஆட்கள் போலீஸ் ஆட்களை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு பதில் அழுத்த பின் சந்தியா பேசினார். கடத்தப்பட்டது எனது கணவன் தான் என்று கூறினார். ஆனால் அரசாங்கத்தில் எந்த சலுகையும் கொடுத்து அவரை மீட்க்க மாட்டேன், அது தவறான விஷயங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று பேசினார். இதை பார்த்த சிவகாமி கோவதின் உச்சிக்கு சென்றார். என் மகனை விட இவளுக்கு அந்த போலீஸ் காரர்கள் கொடுக்கும் கோப்பை தான் முக்கியமா என்று கத்தினார். அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…