Tamizhum Saraswathiyum Today Episode | 14.02.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவின் வளைகாப்பு விழா நல்லபடியாக முடிந்தது. சரஸ்வதியின் குடும்பம் கோதை வீட்டில் இருந்து அவர்களோடு பேசி சிரித்து விளையாண்டு மகிழ்ச்சியாக இருந்தார்கள். பின் அவர்களும் வீட்டுக்கு கிளம்பினார்கள். போகும்போது சரஸ்வதியின் அம்மா தன் மகளுக்கும் இப்படி ஒரு விசேஷம் கூடிய விரைவில் நடக்க வேண்டும் என்று ஏக்கமாக கூறி கிளம்பினார். இதை கேட்ட கோதை கொஞ்ச நேரத்தில் கோவிலுக்கு கிளம்பினார் நடேசன் உடன் . பின் கடவுளிடம் மனம் உருகி வேண்டினார். சரஸ்வதிக்கும் குழந்தை பாக்கியம் சீக்கிரமே அமைய வேண்டும் என்று வேண்டினார். அங்கு இருந்த சாமியாரும் உன் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் என்று கூறினார். அதே நேரம் சந்திரகலா மற்றும் ஆதி இருவரும் வசுந்தரா தங்களை அந்த கோதை வீட்டோடு சேர்ந்து அசிங்க படுத்தி விட்டதாக நினைத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author