Eeramana Rojave 2 Today Episode | 01.03.2023 | Vijaytv

eeramana Rojave 2. 01.03.2023

eeramana Rojave 2. 01.03.2023

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவிடம் ஜீவா எதற்கு இந்த பிரச்சனையை வளர்க்க வேண்டும். உன் முடிவால் பார்த்திபன் மனம் உடைந்து பொய் ராமயாவை திருமணம் செய்ய சம்மதம் சொல்லி விட்டான் என்று கத்தினார். ஆனால் காவ்யா உங்கள் மூவரின் வாழ்க்கையை எண்ணி தான் இப்பபை ஒரு முடிவு எடுத்தேன். கண்டிப்பாக நான் இல்லை என்றால் உங்கள் அனைவரது வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும் என்றார். ஆனால் ஜீவா நாம் தான் காதலித்தோம் என்று வீட்டில் அனைவரிடமும் கூறி விடலாம் என்று சொன்னார். ஆனால் காவ்யா அதற்கு சம்மதிக்கவில்லை. ஜீவா காலில் விழுந்து இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சினார். பின் ஜீவா சொல்ல முடியாமல் மீண்டும் பார்த்திபனை பார்க்க கிளம்பினார். அங்கு பார்த்திபன் நான் ரம்யாவை திருமணம் செய்யவது காவ்யாவின் சந்தோஷத்துக்காக தான். அவளுக்கு பிடித்த வாழ்க்கையை வாழட்டும் என்று கூறினார். இதை கேட்ட ஜீவா மேலும் குற்ற உணர்ச்சிக்கு ஆள் ஆனார். அடுத்து என்ன நடந்தது. காணொளியை பார்க்க….

About Author