ராஜா ராணி 2 தொடரில் இன்று, சந்தியா வேலை விஷயமாக சென்னை வரை கிளம்பினார். சிவகாமி அம்மாவும் அதற்கு சம்மதித்து அனுப்பி வைத்தார். சரவணன் சந்தியாவை வழி அனுப்பி வைத்தார். அந்த நேரம் ரவி பக்கத்து ஊருக்கு ஒரு விஷேஷத்துக்கு செல்ல கிளம்பினார். அப்போது பாஸ்கர் அவரை அனுப்பிவிட கிளம்பினார். ஆனால் போன பாஸ்கர் திரும்பி வரவே இல்லை. அவருக்கு அழைத்தால், விக்கி ஃபோனை எடுத்து பேசினார். பாஸ்கர் என்னிடம் தான் உள்ளான். அவனை நான்தான் அடைத்து வைத்து உள்ளேன் என்று கூறினார். அதை கேட்டதும் பார்வதி பதட்டம் அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…