தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் நமச்சி இருவரும் அந்த காண்ட்ராக்ட் வாங்க அவசரமாக கிளம்பினார்கள். போகும் வழியில் திடீர் என்று தமிழுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒருவருக்கு விபத்து நடந்து, அவசர சிகிச்சைக்காக உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறது என்று செய்தி வந்தது. அதை கேட்டதும் தமிழ் உடனே மருத்துவமனைக்கு கிளம்பினார். நமச்சி நமக்கு முதலில் காண்ட்ராக்ட் முக்கியம் என்று கூறினார். ஆனால் தமிழ் இது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம், முதலில் அதைதான் செய்ய வேண்டும் என்று கூறினார். அந்த நேரத்தில் அர்ஜுன் அந்த காண்ட்ராக்ட் பேசும் நபரை பார்த்து அவரது வேலை விஷயமாக பேசுவது போல் வந்து தமிழுக்கு இந்த காண்ட்ராக்ட் கிடைக்க விடமால் செய்ய வேண்டும் என்று முதிர்ச்சி செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….