மீண்டும் இணையும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி!

புதிய படம் ஒன்றில் மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.


ஏற்கனவே ’கர்ணன்’ என்ற திரைப்படம் மூலம் இணைந்து மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருந்த தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணி புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை தனுஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க இருப்பதாக கூடுதல் தகவல்.

“ உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்தே படம் எடுக்கும் மாரி செல்வராஜ் அவர்கள் இந்த படத்திற்கும் ஒரு உண்மைச் சம்பவத்தையே அடிப்படையாக வைத்து கதை எழுதி இருக்கிறாராம் “

About Author