ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யாவுக்கு வைர மோதிரம் ஒன்றை கொடுத்து ஆசை வார்த்தை பேசி அவரை தன் பக்கம் திருப்பினார் கௌதம். அடுத்து சூர்யா ஐஷ்வர்யாவுக்கு வெறும் பூக்களும், மிட்டாய்களும் கொடுத்தார். இதை சற்றும் எதிர் பார்க்காத ஐஷ்வர்யா, இவளோ பெரிய பணக்காரன் வெறும் பூவை வாங்கி தருகிறான் என்று நினைத்தார். மேலும் தனக்கு ஒரு வைர நகை கொண்டு வருவார் என்று ஆவளாக இருந்தார். பின் சூர்யா தன் வேலை, வியாபாரம், நாட்டு நடப்பு என்று அவருக்கு தோன்றியதை எல்லாம் பேசினார். ஆனால் அதை எல்லாம் ஐஷ்வர்யா விரும்பவில்லை. இவர் பேசுவதை வெறுத்தார். அதே நேரம் கௌத்தம் பேசியதை ரசித்தார். சூர்யாவை விட எல்லா வகையிலும் கௌத்தம் உயர்ந்து நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….