IPL 2023 | ‘நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கும், பெங்களுரு அணிக்கும் என்ன தான் வித்தியாசம்?’

Difference Between CSK And RCB In Yesterday Match Fact Here Idamporul

Difference Between CSK And RCB In Yesterday Match Fact Here Idamporul

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கும், பெங்களுரு அணிக்குமான வித்தியாசங்களை இங்கு பார்க்கலாம்.

பெங்களுரு மற்றும் சென்னை இடையிலான லீக் போட்டியில் நேற்று சென்னை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரு அணிகளிலுமே அதிரடிக்கு பஞ்சமில்லை என்றாலும், பெங்களுரு அணியின் வீக்கான மிடில் ஆர்டர் மறுபடியும் வெளிச்சத்துக்கு வந்ததே, பெங்களுரு அணியின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது.

அதே சமயத்தில் சென்னை வலுவான பேட்டிங் வரிசையை கொண்டு இருந்தது. வரிசையாக ஒவ்வொரு வீரரும் தன் பங்கிற்கு சிக்ஸர் மழைகளை பொழிந்தனர். பெங்களுரு அணியின் பெரிய பலம் டாப் ஆர்டர், அதே சமயம் பலவீனம் மிடில் ஆர்டர் அந்த பலவீனத்தை சரி செய்ய வேண்டும் அல்லது அணியோடு ஒன்றிணைந்து விளையாடும் வீரர்களை கட்டமைக்க வேண்டும்.

குஜராத், ராஜஸ்தான் அணிகளை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு நாளில் தங்கள் திறனை ஒவ்வொரு போட்டிகளிலும் காண்பிக்கின்றனர். ஆனால் பெங்களுரு அணி விராட், டு பிளஸ்சிஸ், மேக்ஸ்வெல் என்ற மூன்று வீரர்களை மட்டுமே முழுக்க முழுக்க சார்ந்து செயல்படுகிறது. அவர்கள் யாரேனும் ஜொலிக்க தவறினால் அணியும் படுத்து விடுகிறது.

“ நேற்றைய போட்டியில் ஒரு கட்டம் வரை பெங்களுரு அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு இருந்தது. மேக்ஸ்வெல், டு பிளஸ்சிஸ் விக்கெட் விழவும் அது அப்படியே தலைகீழாக மாறிப்போனது. மிடில் ஆர்டரை பலப்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த ஆட்டங்களை எதிர்கொண்டால் மட்டுமே பெங்களுரு அணி ஆட்டத்தில் நிலைக்க வாய்ப்பு இருக்கிறது “

About Author